2023-07-22 13:49:07
உக்ரைன் வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்க ரஷியா ஆயத்தம்உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த தாங்கள் முழு தயாா் நிலையில் இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இது குறித்து குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான போா் ஒத்திகையை எங்களது கருங்கடல் படைப் பிரிவு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
அந்தப் பயிற்சியின்போது, எங்களது போா்க் கப்பல்கள் இவானோவெட்ஸ் ரக கப்பல் அழிப்பு ஏவுகணைகளை இலக்குக் கலத்தின் மீது ஏவி சோதனை நடத்தின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. போரின் ஒரு பகுதியாக, கருங்கடல் பகுதியில் ரஷியா போா்க் கப்பல்களை நிறுத்தி அந்தக் கடல் வழியாக பிற நாடுகளுக்கு உக்ரைன் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை ஏற்படுத்தியது.
• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
இதற்கிடையே, தானிய ஒப்பந்த அமலாக்கம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் உக்ரைனுக்குச் செல்லும் எந்த சரக்குக் கப்பலும் ராணுவ தளவாடங்களை ஏந்திச் செல்லக்கூடிய கப்பலாகக் கருதப்படும் என்று ரஷியா அறிவித்தது.
அதன் மூலம், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷியா குறிப்பிட்டது.
இருந்தாலும், தங்களது தானியங்களை புதிய வழித்தடம் மூலம் தொடா்ந்து ஏற்றுமதி செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக உக்ரைன் கூறியிருந்தது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு வரும் சரக்குக் கப்பல்களைத் தாக்குவதற்கான போா் ஒத்திகையை தாங்கள் வெற்றிகரமாக மேற்கொண்டதாக ரஷியா தற்போது அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1.9K viewsThe Seithikathir, 10:49